• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த நடிகர் விவேக்

May 3, 2018 தண்டோரா குழு

பள்ளிப் பாடப்புத்தகங்களில் மரம் வளர்ப்பு குறித்து பாடங்களை சேர்க்க கோரி,நடிகர் விவேக் தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான நடிகர் விவேக் மரம் வளர்ப்பு, இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டும் வருகிறார்.

இந்நிலையில்,நடிகர் விவேக் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் மனுவை அளிக்க,தலைமைச் செயலகம் வந்தார்.ஆனால்,சந்திக்க இயலாததால் செங்கோட்டையன் சார்பில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி விவேக்கிடம் மனுவைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய விவேக்,பாடத்திட்டத்தில் புவி வெப்பமயமாதலின் தீவிரம்,மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த பாடங்களை வைக்க வேண்டுமெனவும் கூறினார்.

மேலும் படிக்க