• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகம் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

December 31, 2016 தண்டோரா குழு

இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலசந்திரன் கூறியதாவது:

இலங்கை அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த அளவு 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும். வடகாற்று தெற்கு நோக்கி வீசுவதால் பனிபொழிவு அதிகமாகவே காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க