• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 22ம் தேதி அனைத்து கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு…

March 20, 2020

வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நேற்று இரவு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
“உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் உலகப்போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து வருகிறது.கொரோனா வைரஸை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை. மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்த அளவிற்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது முக்கியம். வரும் 22-ஆம் தேதி அன்று அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர, மற்ற யாரும் வெளியில் வர வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கையை ஏற்று வரும் 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் 22-ஆம் தேதி அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க