April 23, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,629 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 752. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.