• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா – பாதிப்பு 621 ஆக உயர்வு

April 6, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 91, 851 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். 5016 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எங்கு சென்றதால் பாதிப்பு என்பதைவிட எத்தனை பேர் பாதிப்பு என்பதுதான் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க