• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா – பாதிப்பு 1629 ஆக உயர்வு

April 22, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,596 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை 662.இன்று உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இதுவரை 59,023 கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 5,978 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 23,760.மேலும்,155 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 87,159.தமிழகத்தில் 23 அரசு ஆய்வகங்கள்,10 தனியார் ஆய்வகங்கள் என 33 ஆய்வகங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க