• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக அதிகரிப்பு

April 29, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 94 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1210 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு – தமிழக நிலவரம்:

மொத்த பாதிப்பு – 2,162
இன்று உறுதியானவர்கள் – 104
குணமடைந்தவர்கள் – 1,210
உயிரிழப்பு – 27
சிகிச்சை பெறுபவர்கள் – 922
மொத்த பரிசோதனைகள் – 1,09,961
இன்றைய பரிசோதனைகள் – 8,087

பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் – 1,455
பெண்கள் – 707

மேலும் படிக்க