• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 2162 ஆக அதிகரிப்பு

April 29, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 94 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1210 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு – தமிழக நிலவரம்:

மொத்த பாதிப்பு – 2,162
இன்று உறுதியானவர்கள் – 104
குணமடைந்தவர்கள் – 1,210
உயிரிழப்பு – 27
சிகிச்சை பெறுபவர்கள் – 922
மொத்த பரிசோதனைகள் – 1,09,961
இன்றைய பரிசோதனைகள் – 8,087

பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் – 1,455
பெண்கள் – 707

மேலும் படிக்க