April 29, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 94 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1210 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்பு – தமிழக நிலவரம்:
மொத்த பாதிப்பு – 2,162
இன்று உறுதியானவர்கள் – 104
குணமடைந்தவர்கள் – 1,210
உயிரிழப்பு – 27
சிகிச்சை பெறுபவர்கள் – 922
மொத்த பரிசோதனைகள் – 1,09,961
இன்றைய பரிசோதனைகள் – 8,087
பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் – 1,455
பெண்கள் – 707