• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் முதல் முறையாக பிறந்து 40 நாள் ஆன குழந்தைக்கு மருத்துவ காப்பீடு

October 23, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் முதல் முறையாக
பிறந்து 40 நாள் ஆன குழந்தைக்கு மருத்துவ காப்பீடு அட்டை ஆட்சியர் வழங்கினார்.

அரசால் தத்தெடுக்கப்பட்ட பிறந்த 40 நாட்களே ஆன குழந்தைக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான அடையாள அட்டையினை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

கோவை மாவட்ட சரணாலயம் தத்து வழங்கும் மையத்திற்கு 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை அவர்களது பெற்றோர்களால் ஒப்படைக்கப்பட்டது. தற்பொழுது ஒப்படைக்கப்பட்ட குழந்தைக்கு யாரும் இல்லை மற்றும் மருத்துவர் குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள காரணத்தால் அக்குழந்தையை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு, தமிழகத்தில் முதல் முறையாக 40 நாள் ஆன குழந்தைக்கு ஒரு தனியாக மருத்துவ காப்பீடு அட்டையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை பயன்படுத்தி குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சுந்தர், மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் கிஷோர்குமார், மற்றும் மாவட்ட அலுவலர் கருண மஹாராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க