• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் முதன் முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி

March 29, 2020 தண்டோரா குழு

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவர், அவரது குழந்தை, அவரது தாயார் மற்றும் அவர் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்த இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த ஈரோடு ரயில்வே பணியாளருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அப்பணியாளருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அப்பெண் மருத்துவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவருக்கும் மருத்துவரின் நெருங்கிய தொடர்புள்ளவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இந்தநிலையில் தற்போது வெளியான முடிவில் 29 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மருத்துவர், 51 வயது மதிக்கத்தக்க மருத்துவரின் தாயார், மருத்துவரின் 10 மாத குழந்தை, 58 வயது மதிக்கத்தக்க மருத்துவரின் வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளர் என மொத்தம் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

அதேபோல மருத்துவரின் கணவர் மற்றும் 2 வயது ஆண் குழந்தைக்கான பரிசோதனை முடிவுகளுக்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் காத்திருக்கின்றனர்.தற்போது கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று வார்டில் மொத்தம் ஒன்பது பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் படிக்க