• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் முதன்முறையாக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு உதயம்

December 16, 2020 தண்டோரா குழு

பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு, பாதுகாப்பிற்கென 143 பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்பினர் இணைந்து தமிழகத்தில் முதன்முறையாக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமூகத்தை சேர்ந்த 143 சமுதாய மக்களை ஒன்றைனைத்து பிற்படுத்தப்பட்டோர் அனைத்து சமூகங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதில், முன்னாள் காவல் துறையினர், முன்னாள் அரசு அதிகாரிகள், வழக்கஞர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் முதன் முறையாக துவங்கியுள்ள இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.

அப்போது கூட்டமைப்பை சேர்ந்தவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான ரத்தினசபாபதி பேசுகையில்,

தமிழகத்தில் 143 சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ள நிலையில்,பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அவர்களுக்கான உரிமைகளை இழந்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த அமைப்பும் இழந்த உரிமையை மீட்டெடுக்க குரலை உயர்த்தவில்லை. இதனால் தான் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த அமைப்பு முற்றிலும் அரசியல் சார்பு இல்லாமல், 143 சமுதாயத்தின் ஒரே குரலாகத்தான் இந்த அமைப்பு இருக்கும். எவ்வித கருத்து வேற்றுமைக்கும் இடமின்றி பிற்படுத்தப்பட்டோரின்,இட ஒதுக்கீடு மற்றும் நலன் சார்ந்து மட்டுமே செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,பிற்படுத்தப்பட்ட அனைத்து வகுப்பினரையும் ஒன்றிணைத்து வரும் 18ம் தேதி கோவையில் மாபெரும் ஒன்றிணைவு கூட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பிற்படுத்தப்பட்டோர் அனைத்து சமூக அமைப்பை சேர்ந்த பல்வேறு துறை ஓய்வு பெற்ற அதிகாரிகள் வெள்ளியங்கிரி, ஜனகராஜன், சுந்தராஜன், தம்பு மற்றும் வழக்கறிஞர்கள் அருணாச்சலம், ஞானசம்மந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க