• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடியில் இணைய சேவை முடக்கம்

May 23, 2018 தண்டோரா குழு

போராட்டம்,வன்முறை தொடர்பான தகவல்கள்வாட்ஸ் அப்,பேஸ்புக் மூலம் பரவுவதை தடுக்க தூத்துக்குடி,நெல்லை,குமரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று நடைபெற்ற பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது.இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.60 – க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையில்,இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.அதில் ஒருவர் பலியானார்.5 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் போராட்டம்,வன்முறை தொடர்பாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் செய்திகள் பரவுவதை தடுக்க தூத்துக்குடி,குமரி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் இணைய சேவை முடக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க