• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

March 21, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாளை சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோடியின் இந்த அறிவிப்பால் நாளை நள்ளிரவு 12 மணிமுதல் ஞாயிறு இரவு 10 மணிவரை பயணிகள் ரயில்கள் ஓடாது என்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறு அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என்றும் பிடிஐ அறிவித்திருந்தது. அதைப்போல் தமிழகத்தில் ஞாயிறன்று பேருந்துகள் ஓடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மேலும் படிக்க