September 11, 2017 
தண்டோரா குழு
                                தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி தொடங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி குமரி மகாசபைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் இன்று(செப் 11)  நடைபெற்றது.
அப்போது தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும்,பள்ளிகளை தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவுவெடுக்க தமிழக அரசுக்கு 8 வாரம் கால அவகாசம் அளித்து உள்ளது.