• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு ? – எதற்கெல்லாம் தடை?

July 10, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது, ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய தளர்வுகளாக,தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு காரவகை விற்பனை கடைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கீழ்கண்டவற்றுக்கு தொடர்ந்து தடை!

– தியேட்டர்
– பார்
– நீச்சல் குளங்கள்
– பள்ளி, கல்லூரிகள்
– உயிரியல் பூங்காக்கள்
– மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து

மேலும் படிக்க