• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,372 ஆக உயர்வு

April 18, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் மூலம் 1372 பேருக்கு மொத்தம் கொரோனா பாதித்துள்ளது. இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,363 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை 35,036 ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.1% என்ற அளவில் தான் உள்ளது.சென்னையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இன்று மட்டும் திருப்பூரில் 28 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வங்கியுள்ளோம்.தமிழகத்தில் கட்டுப்படுத்த பட்ட பகுதிக்குள் மட்டும் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேர், கோவையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பரிசோதனை மையங்கள் உள்ளன என்றார்.

மேலும் படிக்க