• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2-வது கட்டத்தில் தான் உள்ளது – பீலா ராஜேஷ்

April 3, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2-வது கட்டத்தில் தான் உள்ளது பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் நேற்று வரை 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்றுமேலும் 102 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் 2ஆம் கட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது. தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90,412 – ஆக உயர்ந்துள்ளது. சமூக தொற்றா கொரோனா பரவலை தடுக்க வீடு, வீடாக சென்று கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் நிலையும் சீராக இருக்கிறது.இதுவரை டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 364 பேருக்கு கொரோனா உறுதியானது.

டெல்லியில் இருந்து வந்தவர்களில் இதுவரை 1200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர் விரும்பினால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தனியார் மருத்துவமனையில் 4 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரமான நுரையீரல் தொற்று இருப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க