March 24, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே 12 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளது. “புதிதாக கொரோனா உறுதியான இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள்.அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.