• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 118 பேர் குணமடைந்துள்ளனர்..!

April 15, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ஒருவரும், 59 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இன்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிந்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தில் இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர். தமிழகத்தில் 1.5 லட்சம் கொரோனா நோயாளிகளுக்குக் கூட சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், வசதிகள் தயாராக உள்ளன. அந்தளவிற்கு அதிகரிக்க வாய்ப்பில்லை, எனினும் தயாராக இருக்கிறோம்.தமிழகத்தில் 26 பரிசோதனை மையங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 5,320 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் நம்மிடம் உள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தோர் விகிதம் 9.5%. இறப்பு விகிதம் 1.1% ஆகும் என்றார்.

மேலும் படிக்க