• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு

April 13, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரச்செயலாளர் பீலாராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது.மொத்தம் 58 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 33,850 பேர் உள்ளனர். தமிழகத்தில் புதிதாக 2 கொரோனா பரிசோதனை மையங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 25, தனியார் ஆய்வகங்கள் 9 உள்ளன.28 நாள் வீட்டுக் கண்காணிப்பு முடித்தவர்கள்-63380.இதுவரை 12746 ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது.உயிரழப்பு 11 என்ற நிலையில் தொடர்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க