• Download mobile app
30 May 2025, FridayEdition - 3397
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நொடியே பதவியை தூக்கிவீசி போராட தயார் – எஸ்.பி.வேலுமணி

January 11, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நொடியே பதவியை வீசிவிட்டு உங்களோடு இனைந்து போராட தாயாராக இருக்கின்றேன். குடியுரிமை சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது என ஒருகூட்டம் கூறிக்கொண்டு உங்களை அவர்களின் சுயனலத்திற்க்காக போராட தூண்டுகிறார்கள் என கோவையில் நடந்த பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி பேசியுள்ளார்.

கோவை கரும்புக்கடை பகுதியில் பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ரூ1000/ வழங்கும் விழா நடைபெற்றது. விதில் கலந்துகொண்டு. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுக்களை வழங்கி சிறபுரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

இரண்டு நாட்களுக்குமுன் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்பொழுது முதல்வர் அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளார். ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட விடமாட்டோம் அம்மாவின் அரசு எப்பொழுதும் சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது. சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா, உட்பட பலரும் இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக மேடையில் அனைத்து ஜாமாத் கூட்டமைப்பின் தலைவர் பஷிர் அமைச்சருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் ஒரு இஸ்லாமியன் பாதிக்கப்பட்டாலும் எனக்கு இந்த பதவியொன்றும் பெரிதல்ல அதை வீசிவிட்டு உங்களில் ஒருவனாக முன்னின்று குரல் கொடுப்பேன். இன்று ஒற்றுமையாக வாழும் நம்மிடையே திமுக மதத்தின் பேரில் பிரிவினையை தூண்ட முயற்ச்சிக்கின்றது. ஒருபோதும் நாம் அதில் விழுந்துவிடக்கூடாது. உங்களுடன் நானிருக்கின்றேன். உங்களுக்கு ஒருபாதிப்பும் குடியுரிமை சட்டத்தால் ஏற்பாடாது எனமக்களிடையே அமைச்சர் வேலுமணி உறுதிபட தெரிவித்தார்.

மேலும் படிக்க