May 26, 2018
தண்டோரா குழு
தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தான்,அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்றும்,அங்கு இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரமானது அல்ல.சில தீய சக்திகள் சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை பரப்பி மக்களை தூண்டி விடுவிதாகவும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளதாகவும் கூறினார்.