• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

April 13, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக தீவிரமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்திரவை நீட்டித்து உத்திரவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்க உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்,

ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்தினால் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும். ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி விலையின்றி வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்.காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க தடையில்லை. பேக்கரி உள்ளிட்ட உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க