• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் – உயர்நீதிமன்றம்

June 29, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுநர் தேர்வுமுறைக்கு பதில் ஹெச்.டிரால் என்ற மின்னணு தேர்வு முறையை எதிர்த்து தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஊழல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மறுப்பதிற்கில்லை என நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும்,வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.எவ்வித குறைப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.சிசிடிவி கேமராக்களை 3 மாதங்களில் பொருத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்சம்,ஊழலை,தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து,தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்க