• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் இன்று புதிதாக 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 49 பேர் உயிரிழப்பு

June 16, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 919 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய இன்று ஒரேநாளில் 49 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மொத்தம் 1438 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26, 782 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 19,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 7,44 244 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது 2௦, 706 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க