• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா தொற்று – 13 பேர் உயிரிழப்பு

May 31, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று புதிதாக 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 1,054. பிற நாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்
13 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 173 ஆக உள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் மொத்தம் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 12,757 பேர் குணமடைந்துள்ளனர்.இன்றைய தேதியில் மொத்தம் 9,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று ஒருநாள் மட்டும் 12,049 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,69,282 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க