• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் இதுவரை 4 மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி” – பீலா ராஜேஷ்

April 8, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
பாதிக்கப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள்.தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்தது. டெல்லி சென்று வந்தவர்களில் கொரோனா உறுதியானவர்கள் – 679 பேர் .டெல்லி சென்று வந்து பாதிக்கப்பட்ட 679 பேரில் 7 பேர் வெளிநாட்டினர்.

தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 738 பேரில் 5 பேர் தவிர மற்றவர்கள் உடல் நலத்துடன் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6,095 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மருத்துவர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க