• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் ஒருநாள் சுற்றுலா திட்டம் தொடக்கம்

December 14, 2019

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் ஒருநாள் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மையங்கள் அதிகம் இருக்கும் பகுதியாக திகழ்ந்து வருவது கோவை மாவட்டம். இதனால் நாள்தோறும் வெளி மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் கோவையை நோக்கி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகம், இந்நிலையில் கோவையில் உள்ள சுற்றுலா மையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் ஒருநாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி காலை 7 மணிக்கு துவங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயணம் குரங்கு அருவி,பாலாஜி கோவில்,வால்பாறை மற்றும் ஆழியாறு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை பார்த்த பின்னர் மீண்டும் இரவு 8 மணிக்கு கோவை வந்தடைகிறது. காலை,
மதிய உணவு தேனீர் என பயணிகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயனத்திற்காக 1100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இத்திட்டத்தால் கோவை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க