• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திலேயே முதன் முறையாக குழந்தைகளுக்கு மல்டிமீடியா & அனிமேஷனை பள்ளி கோவையில் துவக்கம்

February 27, 2022 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் லீப் பள்ளி மற்றும் ஜே,டி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான மல்டிமீடியா, 2D & 3D அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்த பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையம் சண்முகா நகர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தி LEAP Prep பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமாகவே வாழ்க்கைத் திறன், சுதந்திரம், தன்னம்பிக்கை மற்றும் கற்றலுக்கான ஆர்வத்தை வளர்க்கும் பாடத்திட்டத்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதையை குழந்தைகளின் கூடுதல் திறனை கவனத்தில் கொண்டு, குழந்தைகளுக்கான நவீன டிஜிட்டல் பயிற்சி வகுப்புகளை துவக்கியது. ஜே.டி நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்ட இதில்,கிம்ப்,ஒப்பன் ஷாட்,ப்ளெண்டர் என பிரிவுகளாக பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதற்கான துவக்க விழாவில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வருமான Dr.A.பொன்னுசாமி தலைமை வகித்தார்.

ஜே.டி பயிற்சி நிறுவனத்தின் கோவை மண்டல முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சம்ஜித் தனராஜன், தமிழ்நாடு கேம்பிரிட்ஜ் ஆங்கில மைய பயிற்சியாளர் N.பாலசுப்ரமணியன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.சோட்டா சேம்ப் எனும் இத்திட்டத்தை,நடிகரும்,இயக்குநருமான மாதம்பட்டி ரங்கராஜ் துவக்கி வைத்தார்.

மல்டிமீடியா, 2D & 3D அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் போன்றவற்றில் குழந்தைகளுக்கு கூடுதல் திறனை வளர்க்கும் விதமாக இந்த பயிற்சி வகுப்புகளை துவக்கி உள்ளதாக பள்ளி மற்றும் பயிற்சி மைய நிர்வகிகள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள்,ராஜகோபால், செல்வராஜ் சண்முகம் முதல்வர் டாக்டர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மல்டிமீடியா & அனிமேஷனை பள்ளி குழந்தைகளுக்கு தமிழகத்திலேயே முதன் முறையாக இங்கு துவங்கி உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க