• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன் உயிரை பணையம் வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்

May 13, 2017 தண்டோரா குழு

விரைவு ரயில் வரும் பாதையில் ஓடி தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற மாணவியை ரயில்வே ஊழியர் தடுத்து காப்பாற்றியுள்ளார்.

தென் கிழக்கு சீனாவின் புசியன் மாகாணத்தில் உள்ள ரயில் நிலையத்தில் விரைவு ரயில் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது அந்த பாதையில் ஒரு கல்லூரி மாணவி ஒருவர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள்.

அவர் தற்கொலை செய்ய முயற்சி செய்கிறாள் என்று உணர்ந்த அங்கிருந்த ஒருவர் வேகமாக ஓடி, அவரை பிடித்து இழுத்துள்ளார்.

எனினும், அவரையும் மீறி தற்கொலை முயன்றுள்ளார் அப்பெண். ஆனாலும் அந்த நபர் அப்பெண்ணை பிடித்து இழுத்துள்ளார். அப்போது அந்த நபரின் தலை அருகிலிருந்த கான்கீரிட் மீது மோதியது. அதையும் பொருட்படுத்தாமல், அவளை விடுவதாக இல்லை என்று அவளுடைய கைகளை இருக்க பிடித்தார்.

சில நிமிடம் கழித்து, விரைவு ரயில் வந்து சேர்ந்தது. இவர்களுடைய நிலையை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த கல்லூரி மாணவியின் உயிரை காப்பாற்றிய அந்த நபர் ரயில் நிலைய ஊழியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க