• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீரெட்டியால் பரபரப்பு !

April 17, 2018 தண்டோரா குழு

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.நடிகை ஸ்ரீரெட்டி,அண்மையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.இது மட்டுமின்றி தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறினார்.

இதற்கிடையில்,இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், நடிகை ஸ்ரீரெட்டி நீதிமன்றத்தை நாட வேண்டும்.தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர,நீதி வழங்க முடியாது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில்,இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை ஸ்ரீரெட்டி, பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு தன்னையே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமென கூறினார். உடனே செய்தியாளர்கள் முன்னிலை செருப்பால் அடித்துக்கொண்டு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் படிக்க