• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் மையமாகிறது ஏர் இந்தியா நிறுவனம் !

June 29, 2017 தண்டோரா குழு

ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது மற்றும் ஏர் இந்தியாவினன் 60 சதவீத பங்குகள் விற்பது தொடர்பாக கடந்த 2000-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.இதனால் தனியார் மயமாக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையில் ஏர் இந்தியாவின் கடன் 22,000 கோடியாக உயர்ந்ததால் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அருண் ஜெட்லீ தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஏர் இந்தியா பங்குகளை விற்பது மற்றும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு பங்குகளை விற்பதற்கான காலத்தையும், வழிமுறைகளையும் உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உதவியுடன் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க