• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனது சொந்த சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய கோவை ஆட்சியர்

April 8, 2020 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சொந்த சேமிப்பு பணம் ஒரு லட்ச ரூபாயைக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் பள்ளி சிறுவர்கள் கூட தங்களது சேமிப்பை நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.இவ்வாறு வழங்கப்படும் நிதிக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பாக சொந்த சேமிப்பு பணமான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகனிடம் வழங்கினார். இதுவரை கோவை மாவட்டத்தில் 6.4 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பங்களிப்பாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க