April 8, 2020
தண்டோரா குழு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சொந்த சேமிப்பு பணம் ஒரு லட்ச ரூபாயைக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் பள்ளி சிறுவர்கள் கூட தங்களது சேமிப்பை நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.இவ்வாறு வழங்கப்படும் நிதிக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பாக சொந்த சேமிப்பு பணமான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகனிடம் வழங்கினார். இதுவரை கோவை மாவட்டத்தில் 6.4 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பங்களிப்பாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.