• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்ணீர்பந்தல் சாலையில் நவீன இயந்திரங்கள் மூலம் மாஸ்கிளினீங்

May 28, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட தண்ணீர்பந்தல் சாலை பீளமேடு மயான தகனமேடை அருகில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதல் உடனடியாக சாக்கடையை தூர்வாரிட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனடிப்படையில் அப்பகுதிக்கு கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ஆகியோர் தலைமையில் மாஸ்கிளினீங் நடைபெற்றது.

சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் நவீன வாகனங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரம் கொண்டு மாஸ் கிளினீங் நடைபெற்றது.

மேலும் படிக்க