• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்க மகன் மாரியப்பன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன

April 13, 2017 தண்டோரா குழு

தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி வழங்கினார். பாரலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் தில்லியில் குடியரசுத் தலைவரால் இன்று வழங்கப்பட்டது.

7 பேருக்கு பத்ம பூஷண், 75 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 89 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் வழங்கினார்.

பாரலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அதே போல் திரைப்பட பாடகர் யேசுதாசு, ஜக்கி வாசுதேவ், பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தீபா கர்மாகர், சாக்‌ஷி மாலிக் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தில்லியில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க