• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்க நகை தொழிலாளர்களின் தொழில் மேம்பட அரசு துணை நிற்கும் – அமைச்சர் வேலுமணி

July 2, 2018 தண்டோரா குழு

தங்க நகைத் தொழிலாளர்களின் தொழிலை மேம்படுத்த நூறு சதவீதம் இந்த அரசு துணை நிற்கும்,என தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில்,20 ஆயிரம் நகைப்பட்டறைகளில் 80 ஆயிரம் தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். இந்நிலையில் தங்க நகைத் தொழிலாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான,`பொற்கொல்லர் பொது பயன்பாட்டு மையம்` அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவை பெரிய கடை வீதியில் இந்த மையத்தின் கிளஸ்டர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது பேசிய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி,

“தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் காலத்திலிருந்து தங்க நகை தொழிலாளர்கள் நலனை அ.தி.மு.க அரசு செய்து வருவதாக குறிப்பிட்ட அவர்,தங்க நகை தொழிலாளர்களின் தொழில் மேம்பட தேவையான உதவிகளை 100 சதவீதம் இந்த அரசு செய்ய தயாராக உள்ளதாக கூறினார்”.

மேலும் படிக்க