July 19, 2018
தண்டோரா குழு
கடைமடை பகுதியான நாகப்பட்டிணத்தில் தூர்வாரும் பணி மும்மரமாக நடைபெற்று வருவதாகவும், 4-5 நாட்களில் அந்த பணிகள் முடிந்து விடுவதால்,மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் நாகப்பட்டினத்திற்கு வர ஒரு வார காலமாகும் என்பதால் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி நீர் கிடைக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“வரி ஏய்ப்பு இருப்பதனால் தான் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும், அனைத்து கட்சியிலும் எந்த ஆட்சி வந்தாலும் ஒப்பந்ததாரர்கள் பணி செய்து வருவதாகவும், குறிப்பிட்ட கட்சியை சொல்வது தவறு என்றார்.தங்க தமிழ்ச்செல்வன் முதலில் தங்களின்
முதுகு பின்னால் உள்ள அழுக்கை பார்க்க வேண்டும் என்றும்,அவர் உண்மையே சொல்லாததால் அவருடைய கேள்விக்கு பதிலை தவிர்த்தே வருவதாகவும்,நாடாளுமன்றத்தில் மத்திய அரசிற்கு எதிரான தீர்மானம் தொடர்பாக தலைமை கழகம் கூடி முதல்வர் சென்னை வந்தபின் நல்ல முடிவை அறிவிப்போம்” என்றார்.