• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்க தமிழ்ச்செல்வன் உண்மையே சொல்லாததால் அவருடைய கேள்விக்கு பதிலை தவிர்க்கிறேன் – ஓ.பன்னீர்செல்வம்

July 19, 2018 தண்டோரா குழு

கடைமடை பகுதியான நாகப்பட்டிணத்தில் தூர்வாரும் பணி மும்மரமாக நடைபெற்று வருவதாகவும், 4-5 நாட்களில் அந்த பணிகள் முடிந்து விடுவதால்,மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் நாகப்பட்டினத்திற்கு வர ஒரு வார காலமாகும் என்பதால் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி நீர் கிடைக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“வரி ஏய்ப்பு இருப்பதனால் தான் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும், அனைத்து கட்சியிலும் எந்த ஆட்சி வந்தாலும் ஒப்பந்ததாரர்கள் பணி செய்து வருவதாகவும், குறிப்பிட்ட கட்சியை சொல்வது தவறு என்றார்.தங்க தமிழ்ச்செல்வன் முதலில் தங்களின்
முதுகு பின்னால் உள்ள அழுக்கை பார்க்க வேண்டும் என்றும்,அவர் உண்மையே சொல்லாததால் அவருடைய கேள்விக்கு பதிலை தவிர்த்தே வருவதாகவும்,நாடாளுமன்றத்தில் மத்திய அரசிற்கு எதிரான தீர்மானம் தொடர்பாக தலைமை கழகம் கூடி முதல்வர் சென்னை வந்தபின் நல்ல முடிவை அறிவிப்போம்” என்றார்.

மேலும் படிக்க