• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் – கோவையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

December 14, 2020 தண்டோரா குழு

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 19 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பினர் இன்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண்ம சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி, நிர்வாகிகள் வி.ஆர் பழனிசாமி, திருஞானசம்பந்தம், பெரியசாமி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க