• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லியை தொடர்ந்து தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா!

February 14, 2020

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்தார் .10வது முறையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 75.02 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக அதிமுக அரசு அறிவித்துள்ளது. தனியார் பேருந்துகளிலும் இது கட்டாயமாக்கப்பட உள்ளது.

டெல்லியில் இந்த திட்டம் 2017ல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2018ல் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. டெல்லியில் கிட்டத்தட்ட 90% பேருந்துகளில் கேமரா இருக்கிறது. அங்கு தனியார் பேருந்திலும் கேமரா வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக அங்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கு கேமராக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க