• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

.டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது போலீசார் தடியடி

April 7, 2017 தண்டோரா குழு

பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் மீது போலீசார் தடியடிநடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவரி மேலாண்மை அமைக்ககோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாள்களாகபோராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கியை தமிழக விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர். அப்போது தமிழக விவசாயிகள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தியுள்ளனர். மேலும் அய்யாகண்ணு உள்ளிட்ட 25விவசாயிகளை கைது செய்த போலீசார் அவர்களை மீண்டும் ஐந்தர் மந்தரில் இறக்கிவிட்டு சென்றனர்.

மேலும் படிக்க