• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம்

February 5, 2021 தண்டோரா குழு

தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் குளிர் காரணமாக, உடல் நிலை சரியில்லாத காரணமாக, விபத்து காரணமாக என சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விவசாயிகளுக்கு அதரவு தெரிவிக்கும் விதமாகவும், போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்” என்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க