• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம்

February 5, 2021 தண்டோரா குழு

தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் குளிர் காரணமாக, உடல் நிலை சரியில்லாத காரணமாக, விபத்து காரணமாக என சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விவசாயிகளுக்கு அதரவு தெரிவிக்கும் விதமாகவும், போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்” என்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க