• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லியில் போராடக் கூடியவர்கள் விவசாயிகள் இல்லை – ஜி.கே நாகராஜ்

December 14, 2020 தண்டோரா குழு

வேளாண் சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கோவையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

டெல்லியில் விவசாயிகள் போர்வையில் போராடக் கூடியவர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்து வருகிறது.டெல்லியில் போராடக் கூடியவர்கள் விவசாயிகள் இல்லை. இடைத்தரகர்கள் மட்டுமே.நடைபெற்றுவரும் போராட்டங்களில் அந்நிய சக்திகளின் தாக்கம் அதிகம் இருக்கிறது.மிகப்பெரிய இந்திய சந்தை மதிப்பை குலைக்க முயற்சித்து
வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன்கள் முறையாக விவசாயிகளை சென்று சேரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற தலைப்பில் வேளாண் சட்டங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஐந்து இடங்களில் பேரணி நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் விவசாயிகளிடையே வேளாண் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரைவில் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.

மேலும் படிக்க