• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் தாலியறுக்கும் போராட்டம்

April 15, 2017 தண்டோரா குழு

டெல்லியில் தமிழக விவசாயிகள் 33வது நாளாக இன்று, தாலியறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு, பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை கவரும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்தி வந்த விவசாயிகள் நேற்று பெண் வேடமிட்டு போராட்டம் நடத்தினர். இன்று தாலி கட்டி பின்னர் அதை அறுக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க