• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி.வி.எஸ்., குழுமங்களின் நிறுவன தலைவர் வேணு சீனிவாசனுக்கு நா.மகாலிங்கம் விருது

March 21, 2022 தண்டோரா குழு

கோவை தொழிலதிபர் மகாலிங்கம் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில்,’அருட்செல்வர் மகாலிங்கம்’விருது வழங்கும் விழா நடந்தது.

கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக்கல்லுாரியில் தொழிலதிபர் மகாலிங்கம் நுாற்றாண்டு விழா, கடந்த 17-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதையடுத்து கல்லூரியில் கலை, இலக்கிய, விளையாட்டு போட்டிகள் இரண்டு நாட்களாக நடந்தது.

இந்நிலையில், முக்கிய நிகழ்வாக, அருட்செல்வர் மகாலிங்கம் விருது வழங்கும் விழா இன்று நடந்தது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். பிரிக்கால் நிறுவனர் விஜய் மோகன், ரூட்ஸ் குழுமத்தின் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில்,டி.வி.எஸ்.,குழுமங்களின் நிறுவன தலைவர் வேணு சீனிவாசனுக்கு நா.மகாலிங்கம் விருது-2022 வழங்கப்பட்டது.தொழில்,ஆய்வு, சமூக முன்னேற்றத்தில் அவரின் பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

டி.வி.எஸ்., குழுமங்களின் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் பேசுகையில்,

” அருட்செல்வர் மகாலிங்கம் விருதினை அவரின் நூற்றாண்டு விழாவில் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. அருட்செல்வர் போன்ற மனிதர்களை தற்போது பார்க்க முடியாது. மிக எளிமையான மனிதர். பழக இனிமையானவர்.ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.
மாணவர்கள் தான் நம் எதிர்காலம்.

மாணவர்கள் பட்டம் வாங்கினால் மட்டும் போதாது, தொடர்ந்து பல விஷயங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். உங்களின் ஆசிரியர்கள் நினைவு கூற வேண்டும்” என்றார். இந்நிகழ்வில், கிரியா ஆய்வு நிறுவனம் சார்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சமூக மாற்றம், புது கண்டுபிடிப்பு துவங்க ரூ.10 கோடி நிதியில் ஆய்வு மையம் துவக்கப்பட்டது.

இது தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்களிப்புடன் செயல்பட உள்ளது. சுற்றுப்புற சூழல், வாழ்வாதாரம், சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளனர்.

மேலும் படிக்க