• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“டி.என்.ஏ. சோதனை செய்ய திட்டம்” – ஆதார் வழக்கில் மத்திய அரசு வாதம்

May 2, 2017 தண்டோரா குழு

கைரேகை எடுப்பதற்கே கேள்வி எழுப்புகிறீர்களே? அடுத்து டி.என்.ஏ. சோதனை செய்ய திட்டம் வைத்துள்ளோம் என ஆதார் வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ஆதார் அட்டை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் வழக்கில் மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்முகுல் ரோஹத்கி ஆஜரானார்.

அப்போது அவர் கூறுகையில்,

ஆதார் அட்டைக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் எந்த தவறும் கிடையாது.சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் போன்றவை அவசியம்அதற்காக மரபணு சோதனை செய்தால் கூட தவறில்லைஎனக் கூறினார்.

மேலும், பிற நாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை செய்யப்படுகிறது என்றும் ஆதாருக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் உரிமை மீறல் கிடையாது என்றும் அவர் வாதாடினார்.

மேலும் படிக்க