• Download mobile app
01 Aug 2025, FridayEdition - 3460
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிவிஎஸ் நகரில் இரண்டு தொழில்நிறுவனங்களுக்கு சீல்

September 6, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட நஞ்சே கவுண்டர் வீதி, டிவிஎஸ் நகரில் தனியார் ஆஸ்பிட்டாஸ் தொழில் நிறுவனமும், தனியார் இன்ஜினியரிங் தொழில் நிறுவனமும் செயல்பட்டு வந்தன. இதனிடையே இந்த தொழில் நிறுவனங்கள் மாநகராட்சி உரிமம் பெறாமலும் பொதுமக்களும் இடையூறாக நடத்தப்படுகிறது என புகார் எழுந்தது. இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு அந்த தொழில் நிறுவனங்கள் இயங்க தடை விதித்து சீல் வைத்தனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு சிறு,குறு தொழில் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:

கொரோனா, ஜி.எஸ்.டி, மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜாப் ஆர்டர் சரிவு என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிறு,குறு தொழில் முனைவோர்கள் தங்கள் தொழில்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கோவை டிவிஎஸ் நகரில் இயங்கி வந்த இரண்டு தொழிற்சாலைகள் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளுக்கு இடையூறாக செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த இரண்டு தொழிற்சாலைகளாலும் குடியிருப்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் இரண்டு தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர் வேலையிழந்துள்ளனர்.இந்த தொழிற்சாலைகளை நடத்தி வந்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் போது தொழிற்சாலை இயந்திரங்களை வெளியில் வைத்துள்ளனர். அந்த இயந்திரங்கள் மழையில் நனைந்து வீணாகிறது. கோவை மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து முறையீட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க