• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிபன் கடையில் தூங்கியவர் சாவு

September 8, 2022 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் மாகாளியம்மன் கோவில் அருகே டிபன் கடை நடத்தி வருபவர் மந்த் பேரிக் (வயது 44). இவரது கடையில் கெளதம் டோலி (52) என்பவர் சமையல் பார்த்து வந்தார். இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.

இவர் தினமும் இரவு நேரங்களில் அந்த டிபன் கடைகளிலேயே தூங்கி வந்துள்ளார். இதனிடைய சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் டிபன் கடையை மூடிவிட்டு உள்ளே தூங்கி உள்ளார். அப்பொழுது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ளவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க