• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் கடை ஊழியரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி சென்ற மூன்று பேர் கைது

November 29, 2021 தண்டோரா குழு

கோவை இடிகரை பகுதியில் கடந்த நவம்பர் 13ம் தேதி அங்குள்ள டாஸ்மாக் கடை ஊழியர் சிதம்பரம் வீடு திரும்பும் போது மர்ம நபர்கள் வழிமறைத்து அரிவாளால் சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை மர்ம கைப்பற்றி சென்றனர்.

படுகாயமடைந்த சிதம்பரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து(21), இசக்கி பாண்டி(23), வான்பாண்டி(20) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் மூவரும் திட்டமிட்டு இந்த வழிப்பறியில் ஈடுப்பட்டதும் பணம் தர மறுத்ததால் சிதம்பரத்தை தாக்கி விட்டு வாகனம் செல்போனை பறித்து தப்பியதும் தெரியவந்தது. இவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இவர்கள் மூவர் மீதும் ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க