• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் கடைகள் திறக்க இடம் இருக்கிறது.” நீட் தேர்வு நடத்த இடமில்லையா” – கார்த்திக் சுப்பராஜ்

May 4, 2018 தண்டோரா குழு

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் வருகின்ற ஞாயிற்றுகிழமை 6ம் தேதி நடக்கிறது.

தமிழகத்தில் மதுரை,நெல்லை,திருச்சி,கோவை,நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டுமே இந்த தேர்வுக்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் மாணவர்களுக்கு பலரும் உதவி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில்,இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை சாடி ட்வீட் செய்துள்ளார்.அதில், “எல்லாத் தெருக்களிலும் ஒயின்ஷாப் திறந்து வைக்க இடமிருக்கிறது.ஆனால், நீட் தேர்வு எழுதுவதற்குத் தமிழகத்தில் இடம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதா?உங்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
‘தமிழகத்தில் நீட் தேர்வைத் தடைசெய்’ என்பதில் இருந்து,‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்துங்கள்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.அருமையான விளையாட்டு.நம் குரல்களை உண்மையிலேயே அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களா?” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க