• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரை விற்றால் மருந்தகங்களின் உரிமம் ரத்து

June 26, 2021 தண்டோரா குழு

கொரோனா ஊரடங்கால் கோவை உள்பட 11 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதும், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் கஞ்சா, சாராயம், வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக பயன்படுத்துதல் போன்றவை அதிகரித்து வருகிறது.கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவையில் போதைக்காக வலி நிவாரணி மற்றும் மயக்கத்துக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்தவர்களில் ஒருவர் சொந்தமாக மருந்தகம் வைத்து இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா கூறியதாவது:

மருந்தகங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை தண்ணீரில் கரைத்து சிலர் ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்கு அடிமையாகின்றனர் இதுபோன்று நரம்புகளில் செலுத்துவதால் உயிருக்கே ஆபத்தாக முடியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சொந்தமாக மருந்தகம் வைத்துள்ளார்.

விசாரணையில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. எனவே மருந்தகங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும்போது முறையாக டாக்டர்களின் பரிந்துரை சீட்டு உள்ளதா? என கேட்டு வழங்க வேண்டும். இல்லையென்றால் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது.

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரணி மாத்திரைகளை விற்றால் சம்பந்தப்பட்ட மருந்தக விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க