• Download mobile app
30 Jan 2026, FridayEdition - 3642
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்தால் எதிர்கொள்ள தயார்–அப்போலோ ரெட்டி

July 18, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால் தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க கோரிக்கை வலுத்துள்ள சூழலில் அப்போலோ மருத்துவமனை தலைவர்பிரதாப் ரெட்டி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால் அதை எதிர்கொள்ள தயார் என்றும் அதற்கான அனைத்து ஆவணங்களும் தயாராக இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும், சிகிச்சையின் போது எந்த தலையீடும் இல்லையென்றும், மருத்துவர் குழு தேர்வுக்கான ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் பிரதாப் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் படிக்க